அந்த விஷயத்தில் செட் ஆகல..! அதனால் தான் திருமணமான ஓராண்டில் தெய்வம் தந்த வீடு சீதாத விவாகரத்து! வெளியான அதிர்ச்சி காரணம்!

தெய்வம் தந்த வீடு நடிகை சீதாவிற்கும் அவரது கணவர் டான் டோமிக்கும் இடையே செட் ஆகாததால் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை மேக்னா. இவர் இந்த சீரியலில் சீதா ராம் குமார் சக்கரவர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரிதாக பேசப்பட்டது. இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இதனைத் தொடர்ந்து அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள்வந்தாள் சீரியலில் நடித்து மீண்டும் பிரபலமான நடிகையாக வலம் வந்தார். 

தமிழைப் போலவே மலையாளத்திலும் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார் நடிகை மேக்னா. இவர் தமிழில் வெளியான கயல் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை மேக்னா தற்போதும் பல சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என மாறி மாறி சீரியல்களில் நடித்து வரும் இவர், தன்னுடைய நெருங்கிய தோழியின் அண்ணனான டான் டோமி என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்களும் பச்சைக்கொடி காட்டி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இருவருக்கும் கடந்த 2011 ஆம் ஆண்டு வெகுவிமர்சையாக எர்ணாகுளத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் திரையுலகினர் சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் பங்கேற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணமான சில நாட்களிலேயே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மேக்னாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ ஆரம்பித்தனர். பின்னர் இவர்களுக்கு இடையே எழுந்த மனக்கசப்பு கருத்து வேறுபாடு ஆக மாறி விவாகரத்து வரை கொண்டு சென்றது. தற்போது மேக்னாவும் அவரது காதல் கணவர் டான் டோமியும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இதுகுறித்து நடிகை மேக்னாவின் கணவர் டான் டோமி, எங்கள் இருவருக்கும் இடையில் அந்த விஷயத்தில் செட்டாகவில்லை. ஆகையால்தான் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார். மேக்னாவின் கணவர் வெளியிட்டுள்ள என்ற தகவல் தற்போது சின்னத்திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.