மாமிசங்களில் மட்டும் அல்ல காய்கறிகளிலும் ஈகோலி பாக்டீரியாக்கள்! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

அன்றாடம் உபயோகிக்கும் காய்கறிகளில் இருந்தும் நோய் பரப்பும் பாக்டீரியாக்கள் பரவக் கூடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


அமெரிக்காவில் சூப்பர் பக்ஸ் என்னும் நோய் அதிக அளவில் பரவி வருகின்றது. இந்த நோயானது அசைவ உணவு உண்ணும் மனிதர்களிடையே எளிதில் பரவக்கூடியது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். 

இந்நிலையில் இந்த நோயை பற்றி மேலும் ஆய்வு செய்ய அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமானது பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அவற்றின் முடிவுகள் அதிர்ச்சிகரமாக அமைந்திருந்தது.

அதாவது அமெரிக்காவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் சூப்பர் பக்ஸ் என்ற பாக்டீரியாவினால் பாதிக்கப்படுகின்றனர் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் நரம்பு மண்டல பகுதியானது வலுவிழந்து நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்ய இயலாமல் துவண்டுவிடுகிறது. இந்த நோய் அசைவம் சாப்பிடுபவர்களிடம் மட்டுமின்றி சாதாரண காய்கறிகளை சாப்பிடுபவர்களையும் தாக்குகின்றது.

ஈ கொலி என்ற கொடிய பாக்டீரியாவை தண்ணீரில் செலுத்தி அதனை எலி ஒன்றிற்கு கொடுத்தனர். சில மாதங்களிலேயே எலியின் மண்டலப் பகுதி பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை இழந்தது.

ஆய்வின் இறுதியில் தரமற்ற காய்கறிகளை உண்ணும் மனிதர்களுக்கும் எளிதில் இந்த பாக்டீரியாவானது பரவக் கூடிய சூழல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையை கண்ட பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.