தூங்கிக் கொண்டிருந்த மாமியார் மீது 5 லிட்டர் மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்த மருமகள்..! அதற்கு அவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

மாமியாரின் வரதட்சணை கொடுமையை தாங்க இயலாமல் மருமகள் அவரை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொலை செய்துள்ள சம்பவமானது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வல்லதிராகோட்டை அருகே மணியம்பள்ளம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதீபா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு 9 மாத குழந்தை ஒன்றுள்ளது. இதனுடைய அடிக்கடி பிரதீபாவுக்கும் அவருடைய மாமியாரான ராஜம்பாளுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தன.

ராஜம்பாள் அதே பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்துள்ளார். நேற்று வேலை முடித்துவிட்டு வீட்டில் ராஜம்பாள் உறங்கி கொண்டிருந்தார். அப்போது பிரதீபா அவருடைய உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளார். ராஜம்பாள் மழை சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டெடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடலில் 90% காயங்களுடன் ராஜம்பாள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் போராடி வருகிறார். தகவலறிந்த காவல்துறையினர் பிரதீபாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், "என்னிடம் வரதட்சணை கேட்டு என் மாமியார் மிகவும் கொடுமைப்படுத்தினார். அதுமட்டுமின்றி நானும் என்னுடைய கணவரும் இணைந்து வாழ்வதற்கு என்னுடைய மாமியார் இடைஞ்சலாக இருந்ததால் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்ய முயற்சித்தேன்" வாக்குமூலம் கொடுத்தார்.

வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரதீபாவை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.