திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி! தொண்டர்கள் கவலை!

திமுக பொருளாளர் துரைமுருகன் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென்று காய்ச்சல் வந்ததால் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இன்று நம் நாட்டின் 17-வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக மக்கள் இதனை பார்த்து வருகின்றனர். பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் தலையெழுத்தை மாற்றி அமைக்கும் தேர்தலாக கருதப்படுகிறது.

இந்நிலையில், திமுகவின் பொருளாளரும் தமிழகத்தின் கடந்த 40 ஆண்டுகால அரசியலில் தனக்கென ஒரு தனி அங்கிகாரத்தை பதித்தவர் துரைமுருகன் அவர்கள். திமுகவின் சோதனை காலங்களில் தன் சொந்த நலனை கருதாமல் கலைஞர் மற்றும் திமுகவின் நலனையே கருதியவர்களுள் துரைமுருகனும் ஒருவர்.

இந்நிலையில் அவர் திடீரென்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவருக்கு சிறுநீரக தொற்று ஏறபட்டு உடல்நலப் குறைந்ததால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

இப்படியான நேரத்தில் துரைமுருகன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது திமுக தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் வெற்றியை அனுபவிக்க அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.