கொரோனா ஊரடங்கு! தினமும் 5000 பேருக்கு வயிறார பசியாற்றும் பிரபல நடிகை! யார் தெரியுமா?

கொரோனா தொற்றின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவினால் முடங்கி உள்ள சூழ்நிலையில், உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் நடிகை மற்றும் ஆந்தராப் பிரதேச மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆனா ரோஜா அவர்கள் தினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.


நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்கும் கொரோனா தொற்று இந்தியாவில் இதுவரைக்கும் 1000 மேல் தாண்டி உள்ளது. தொற்று அதிகம் பரவமால் இருக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், கொரோனாவினால் நாடே முடங்கி கொண்டு இருக்கும் வேலையில், அரசியல் வாதிகள், சமூக ஆர்வளர்கள், நடிகர்கள் என அனைவரும் வீட்டில் உணவின்றி தவித்து வரும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.  

அந்த வகையில், நடிகை மற்றும் அரசியல் வாதியன நடிகை ரோஜா அவர்கள் ஊரடங்கால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் வகையில் ஒருவர் தினந்தோறும் 5 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.

இதனால் நகரி மற்றும் புத்தூர் நகர சபைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு என்பது பிரச்சினையாகவே உள்ளது. இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தரமான உணவை ரூ.4-க்கு வழங்கி வருகிறார்.

எம்.எல்.ஏ. நடிகையும் ஆனா ரோஜா அவர்கள் தனது சொந்த தொகுதியான நகரியில் உணவு கூடத்தை ஒன்றை நிறுவினார். அதனை தற்போது அந்த உணவு கூடத்தை விரிவாக்கி, தினமும் மேலும் 5 ஆயிரம் பேருக்கு கூடுதலாக உணவு தயாரித்து ‘ரோஜா சாரிடபுள் டிரஸ்ட்’ மூலம் ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கிட முடிவு செய்து அமல்படுத்தி வருகிறார்.

இது குறித்து ரோஜா அவர்களிடன் கேட்டபொழுது, அவர் தெரிவிப்பது, என்னால் முடிந்ததை நான் செய்கிறேன். செல்வந்தர்கள் அனைவரும் இப்படிப்பட்ட பேரிடர் நிலையில், ஏழைகளை காக்க உதவி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், ரோஜா தனது தொகுதி மக்களின் அடிப்படை வசிதிகளை சரியாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.