ஆசை ஆசையாக கல்லூரிக்கு சென்ற மாணவி! விடுதி அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு! நேரில் பார்த்து அதிர்ந்து நின்ற தோழிகள்!

கல்லூரி மாணவி விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலத்தில் அனந்தபுரி என்னும் இடமுள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜு. இவருடைய மகளின் பெயர் காவியா. காவியாவின் வயது 20. ஆந்திராவில் உள்ள தனியார் கல்லூரியில் காவியா பி.எஸ்.சி நர்சிங் படிப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடங்களில் காவியா தெலுங்கு மொழியிலேயே பாடங்களை படித்தார். கல்லூரியில் ஆங்கில மொழியில் படிக்க வேண்டும் என்பதால் அவர் பாடங்களில் சற்று பின்தங்கி இருந்தார். இது அவருக்கு கடுமையான மன உளைச்சலை அளித்தது.

நேற்று முன்தினம் காவியா தனக்கு வயிற்று வலி என்று கூறி கல்லூரிக்கு செல்லாமல் விடுதியிலேயே தங்கிவிட்டார். யாரும் இல்லாத நேரத்தில் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளான காவியா, தன்னுடைய துப்பட்டாவை மின்விசிறியில் போட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி முடிந்து விடுதிக்கு திரும்பிய சக மாணவிகள் காவியா தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விடுதி நிர்வாகம் அப்போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தது.

சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் காவியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஆந்திர மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.