அம்மாவை வரம்பு மீறிய பெரியப்பா! நேரில் பார்த்த மைனர் மகன் செய்த பகீர் சம்பவம்! சேலம் திகுதிகு!

தாயை ஆபாசமாக பேசியதால் பெரியப்பாவை சிறுவன் கொலை செய்துள்ள சம்பவமானது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலத்தில் சரவணன், முருகேசன் ஆகிய 2 பேர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். முருகேசனுக்கு திருமணமாகி 15 வயதில் ஒரு மகன் உள்ளான். இருவரும் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு வழக்கம் போல சகோதரர்கள் இருவருக்கும் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அப்போது சரவணன் மது அருந்திவிட்டு முருகேசனின் மனைவியை பற்றி ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசனின் மகன் உருட்டுக்கட்டையால் சரவணனை கடுமையாக அடித்துள்ளார். 

இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் காவல்துறையினர் முருகேசனின் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.