தி.மு.க. என்றாலே ரவுடிக் கட்சி... முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை.

ஆட்சியில் இல்லாத நேரத்திலேயே பிரியாணிக் கடை, பியூட்டி பார்லர்களில் ரவுடித்தனத்தைக் காடி அடாவடி செய்தது தி.மு.க.தான். அதனை குறிப்பிட்டுப் பேசி தி.மு.க.வை தெறிக்க விட்டார் எடப்பாடி பழனிசாமி.


இன்று, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ‘‘தி.மு.க.வில் உண்மைக்கு, உழைப்புக்கு, தியாகத்துக்கு இடமில்லை. திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி.

அங்கு செந்தில்பாலாஜி போன்று யார் வேண்டுமானாலும் சேர் போடலாம். அ.தி.மு.க.வில் இருந்து யார் போனாலும், மாவட்ட செயலர், மாநில பொறுப்பு, வேட்பாளர் என கொடுக்கின்றனர். ஆனால், அதிமுகவில் அப்படியல்ல, இந்த ஜனநாயக இயக்கத்தில் விஸ்வாசமுள்ள சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும்.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வர் ஆகிவிடுவேன் என கனவு மட்டும்தான் காண முடியும். செந்தில் பாலாஜி எத்தனையோ வேஷம் போடுவார். அவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள். அவர் 5 கட்சியில் மாறியுள்ளார்; போலியான அவரை நம்பிவிடாதீர்கள். செந்தில் பாலாஜி ஊழல் செய்ததாக கரூரில் ஸ்டாலினே பேசியுள்ளார்.

இப்போது அவரே செந்தில் பாலாஜிக்கு ஓட்டு கேட்கிறார். 2006 _ 2011 வரையில் தமிழகம் முழுவதும் மின்வெட்டு இருந்தது. இதனால் பலர் வேலையிழந்தனர். அப்போது, ஜெயலலிதா அளித்த வாக்குறுதியின்படி, முதல்வராக பொறுப்பேற்று 3 ஆண்டுகளில் மின்மிகை மாநிலமாக மாற்றினார். திமுக அராஜகம் செய்யும் ரவுடி கட்சி, கட்டப்பஞ்சாயத்து செய்யும் கட்சி. ஸ்டாலினின் மகன் உதயநிதி, டிஜிபி.,யையே மிரட்டியுள்ளார். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால், மக்கள் படாதபாடு படுவர்’’ என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

சரியாகத்தானே கூறியிருக்கிறார்.