குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் இல்லையா? அடிக்கடி தோல் வியாதி வருகிறதா? உங்க வீட்ல இந்தப் பிரச்னை இருக்குதான்னு பாருங்க!

இப்பொழுது இருக்கும் வாழ்க்கை சூழ்நிலையில் மக்கள் இயற்கையோடு ஒன்றிய வாஸ்துவை கடைபிடிக்க தவறி பல இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள்.


எதை கடைபிடிக்காவிட்டாலும் வாஸ்துவின் இந்த முதன்மையான விதிகளை நிச்சயமாக கடைபிடித்து வெற்றியை பெற்றுக்கொள்ளுங்கள். வீட்டில் வடக்கிலும், கிழக்கிலும் அதிக காலியிடம் இருக்க வேண்டும். வீட்டின் வடக்கிலும், கிழக்கிலும் உச்ச பகுதியான வடக்கு சுவரில் கிழக்கு ஒட்டிய ஜன்னலும், கிழக்கு சுவரில் வடக்கு ஒட்டிய ஜன்னலும் அமைக்க வேண்டும்.

வடகிழக்கு பகுதியில் பாரம் இல்லாமல் இருக்க வேண்டும். வடகிழக்கு பகுதியில் சமையலறை, பூஜையறை, பெட்ரூம் போன்றவை அமைக்கக்கூடாது. வடகிழக்கு பகுதியில் இருக்கும் அறையை படிக்கும் அறையாக பயன்படுத்த வேண்டும்.

தென்மேற்கு மூலையில் பெட்ரூம் அமைத்துவிட்டு அந்த பெட்ரூமில் வடகிழக்கில் டாய்லெட் அமைக்கக்கூடாது. வடகிழக்கில் படிக்கட்டு, மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கக்கூடாது. வடகிழக்கு மூலையில் மின்சார இணைப்பு பெட்டி அமைக்கக்கூடாது. வடகிழக்கு சரிவர இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும்.

தோல் சம்பந்தப்பட்ட வியாதி, கண் நோய், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளாமல் இருக்க வடகிழக்கு குறைபாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

வடகிழக்கு கட்டமைப்பு, வடக்கு காம்பவுண்ட் இல்லாமல் இருக்கும் அமைப்பால் மனநோய், மன அழுத்தம், அண்டை அயலாருடன் சண்டை சச்சரவு, பொருளாதார குறைபாடு, தேவையில்லாத செலவுகள், குழந்தைகள் படிப்பில் ஆர்வம் குறைதல், தீய பழக்கவழக்கங்கள், கடன் பிரச்சனைகள், வேலை இல்லாமை, கணவன்-மனைவி வாழ்க்கையில் கருத்து வேறுபாடு, பணம் வீட்டில் தங்காமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

ஆகையால் மேற்கண்ட விதிகளை நிச்சயமாக கடைபிடிக்க வேண்டும். ஒருவரின் வீட்டில் வடக்கு, கிழக்கு சரிவர இருந்தால் எதையும் எதிர்கொள்ள தைரியம் கிடைக்கும்.