டெல்லி அணியை தெறிக்க விட்டு வென்ற சென்னை அணி! கலக்கத்தில் மும்பை அணி!

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 2 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற சென்னை அணி, டெல்லி அணியை பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்கம் முதலே சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் திணறினர். ரிஷாப் பாண்ட் மட்டும் 25 பந்துகளில் 38 ரன்களை எடுத்தார். காலின் முன்றோ 27 ரன்களை எடுத்தார்.  மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாமல் வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினர்.

சென்னை அணியின் தீபக் சஹர் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும் ஹர்பஜன் சிங் மற்றும் பிராவோ ஆகியோர் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.இதனால் டெல்லி கேபிட்டல்ஸ்  அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. 

பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டு பிளெஸ்ஸிஸ் மற்றும் வாட்சன் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இந்த இரு வீரர்களும் 50 ரன்களை விளாசினர். இதனால் சென்னை அணியின் வெற்றி உறுதியானது. சென்னை அணி 19 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.  சிறப்பாக விளையாடிய டு பிளெஸ்ஸிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி ipl இறுதி போட்டியில் மும்பை அணியை எதிர்கொள்ளவுள்ளது.