CSK வை ஸ்கெட்ச் போட்டு அடக்கிய அஸ்வின்! டு பிளெஸ்ஸிஸ்,தோனி ஆறுதல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 160 ரன்களை எடுத்துள்ளது.


டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டு பிளெஸ்ஸிஸ் மற்றும் வாட்சன் களமிறங்கினர். வாட்சன் 26 ரன்களுக்கு அவுட் ஆனார். டு பிளெஸ்ஸிஸ் சிறப்பாக விளையாடி 38 பந்துகளில் 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 முதல் 18 ஓவர் வரை மந்தமாக விளையாடியதால் அந்த அணியால் 20 ஓவர்களுக்கு 160 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

டோனி கடைசியில் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார். கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் சிறப்பாக பந்து வீசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 3 முக்கிய விக்கெட்களை எடுத்தார். கிங்ஸ் XI பஞ்சாப் அணி 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சேசிங் செய்து வருகிறது.