பாலியல் விளையாட்டு எல்லை மீறியது! இளம் பெண் குரூர கொலை! சடலத்தை வக்கிரமாக படம் எடுத்து ரசித்த சைக்கோ மனிதன்!

நியூசிலாந்து நாட்டு இளைஞர் பிரித்தானிய நாட்டு இளம்பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொலை செய்த சம்பவம் குறித்த பின்னணி தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..


ஆக்லாந்து அருகே உள்ள வனப்பகுதியில் இளம் பெண் ஒருவரின் சடலம் சமீபத்தில் மீட்கப்பட்டது. இதனை குறித்து அந்நாட்டு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. அதாவது 22 வயது மிக்க கிரேஸ் மில்லேன் என்னும் இளம்பெண் பிரித்தானியா நாட்டை சேர்ந்தவர். இவருக்கு சமூக வலைத்தளத்தின் மூலம் 27 வயது மிக்க நியூசிலாந்து நாட்டு இளைஞருடன் பழகி வந்திருக்கிறார்.

இந்நிலையில் பிரித்தானிய பெண் கிரேஸ் மில்லேன் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுலாவுக்காக சென்றிருக்கிறார். அப்போது சமூக வலைத்தளத்தின் மூலம் தனக்கு நண்பரான நியூசிலாந்து நாட்டில் இளைஞரையும் சந்தித்து பேசியுள்ளார். இதனை அடுத்து இருவரும் ஆக்லாந்து வனப்பகுதியில் சுற்றித்திரிந்து உள்ளனர் அந்த இளைஞர் இளம் பெண்ணான கிரேஸ் மில்லியனை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமான முறையில் கொலை செய்தும் உள்ளார் .  

கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் உடலை எவ்வாறு மறைப்பது குறித்து இணையத்தில் பல மணி நேரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்து இருக்கிறார் அந்த நியூசிலாந்து நாட்டு இளைஞர். கடைசியில் அந்தப் பெண்ணை ஒரு பெட்டியில் வைத்து அடைத்து இருக்கிறார் . அதற்கு முன்பாக இறந்தபோன அந்தப் பெண்ணின் உடலை பல கோணங்களில் புகைப்படம் எடுத்து வைத்திருக்கின்றான். பின்னர் பெண்ணின் உடலை மறைத்து வைத்திருந்த பெட்டியை ஆக்லாந்து வனப்பகுதியின் ஒரு ஓரத்தில் மறைத்து வைத்துவிட்டு சென்றிருக்கிறான் .

அந்த நியூசிலாந்து நாட்டில் இளைஞர். இந்த தகவலை போலீசார் விசாரணையின்போது கண்டறிந்துள்ளனர். மேலும் நியூசிலாந்து நாட்டு இளைஞரின் செல்போனில் கிரேஸ் மில்லேனின்7 நிர்வாண புகைப்படங்கள் இருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பிரித்தானிய நாட்டில் இளம் பெண் இறந்து கிடந்தபோது நிர்வாண நிலையில் இருந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

தற்போது இந்த கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணையின்போது நியூசிலாந்து நாட்டு இளைஞர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், பிரித்தானியா நாட்டு இளம் பெண்ணான கிரேசும் நியூசிலாந்து நாட்டு இளைஞரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் இருவரும் மனமொத்து தான் உடலுறவில் ஈடுபட்டதாகவும் கூறியிருந்தார்.

ஒரு கட்டத்தில் இறந்துபோன அந்த இளம்பெண் தன் கழுத்தை லேசாக இறுக்கிப் பிடிக்குமாறு அந்த இளைஞரிடம் கூறியதாகவும் அதனால் அந்த இளைஞர் அந்த பெண்ணின் கழுத்தை இறுகப் பிடித்து உள்ளார் எனவும் இளைஞரின் சார்பாக பேசிய வழக்கறிஞர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு செய்யும் போது அந்தப் பெண் உயிர் இழந்ததாகவும் கூறினார். அதுமட்டுமில்லாமல் கிரேஸ் மில்லேனும் நியூசிலாந்து நாட்டில் இளைஞரும் ஒன்றாக கைகோர்த்து சென்ற சிசிடிவி காட்சிகளும் நீதிமன்றத்தில் சமர்ப்பணம் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை மேலும் தொடர வேண்டும் எனவும் வழக்கின் தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.