மாஸ் காட்டிய விராத் கோலி, இஷாந்த் சர்மா! இன்னிங்ஸ் வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர இறுதியில் பங்களாதேஷ் அணி தனது 2-வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.


முன்னதாக பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலை பெற்றது.இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 136 ரன்களை விளாசினார்.

பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் பங்களாதேஷ் அணியின் ரஹிம் சிறப்பாக விளையாடி அவுட்டாகாமல் 59 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

இவரது சிறப்பான ஆட்டத்தால் பங்களாதேஷ் அணி இரண்டாம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்துள்ளது. வங்கதேச அணி இந்திய அணியை விட 89 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது உறுதி என்று ஆகிவிட்ட நிலையில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கும் நல்ல வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.