குழந்தைக்கு மாதவிலக்கு

பிறந்த சில தினங்களில், பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பில் ரத்தக்கசிவு தென்படுவதற்கு வாய்ப்பு உண்டு. பெண் குழந்தைக்கு ஏதோ ஆபத்து என்று அச்சப்படுவதற்கு அவசியம் இல்லை. குழந்தைகளின் மார்பு வீக்கமாக இருப்பதுபோல், இதுவும் ஹார்மோன் விளையாட்டுதான்.


·         பெண் குழந்தைகளின் பிறப்புறுப்பை சுற்றியுள்ள பகுதிகள் வீக்கமடைந்து காணப்படலாம்.

·         பெண் குழந்தையின் பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல் இருக்கவும் வாய்ப்பு உண்டு.

·         மிகவும் குறைவான அளவில் பிறப்புறுப்பில் ரத்தம் தென்படவும் வாய்ப்பு உண்டு.

·         குழந்தையின் மார்பில் இருந்து பால் கசிவதற்கும் வாய்ப்பு உண்டு.

தாய்க்கு அதிகப்படியாக சுரக்கும் ஹார்மோன் காரணமாக, இதுபோன்ற மாற்றங்கள் ஏற்படுவது சகஜமே. இரண்டு மாதங்களுக்குள் இந்த மாற்றங்கள் எல்லாமே படிப்படியாக குறைந்துவிடும். அதற்கு மேல் நீடிக்கும்போதும், அதிகப்படியாக ரத்தக்கசிவு இருந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும்.