பிக்பாஸில் இருந்து வெளியேறிய அக்காவின் தன்னுடைய தாயாரை ஜாமீனில் வெளியே எடுத்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறையில் தவிக்கும் தாய்! பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின் செய்த முதல் வேலை! நெகிழ்ந்த உறவுகள்!
திருச்சி கே.கே.நகரை சேர்ந்த தமயந்தி, மகள் ராஜலட்சுமி, மருமகள் ராணி, அருணகிரி, சொர்ணராஜன் ஆகியோர் அனுமதியின்றி 1998 முதல் 2006-ஆம் ஆண்டு வரை ஏலச் சீட்டு கம்பெனி நடத்தி வந்தனர்.
இவர்கள் நடத்தி வந்த சீட்டு கம்பெனியில் ஏழை எளிய மக்கள் வீட்டு செலவுகளை மிச்சம் பிடித்து கிட்டதட்ட 32 லட்சம் ரூபாய் செலுத்தி இருந்தனர். ஆனால் ஏலச்சீட்டு ஏலம் முடிந்து பணத்தை திருப்பி தரவில்லை என 2007 -ம் ஆண்டு திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
வழக்கு விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சொர்ணராஜன் மற்றும் அருணகிரி ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். ஏலச்சீட்டு நடத்தி மோசடி நிரூபிக்கப்பட்டதால் தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் தலா 2 ஆயிரம் ரூபாயும் தண்டனை விதித்து திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏலச்சீட்டால் பாதிக்கப்பட்ட முதலுட்டாளர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கவேண்டும் எனவும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினின் தாயார் ராஜலட்சுமி, மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கவின் தற்போது தன்னுடைய தாயாரை ஜாமீனில் வெளியே எடுத்துள்ளார். சீட்டு கம்பெனியால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணத்தை திருப்பி அளிக்கப்போவதாகவும் உறுதி அளித்துள்ளார். அதன் பின்னரே ராஜலட்சுமி, தமயந்தியும் ஜாமீனில் விடப்பட்டனர்.
இந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.