கள்ளத்தொடர்பினால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்மா உனக்கு..! மகள் எனக்கு..! விபரீத தகாத உறவால் வேலூர் ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த பயங்கரம்!
வேலூர் மாவட்டத்தில் கன்சால்பேட்டை என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு ஆட்டோ ஓட்டுநரான பரத் என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 36. வீட்டிற்கு அருகேயுள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்டின் தலைவராக பரத் செயல்பட்டு வந்தார். இவருடைய மனைவியின் பெயர் செல்வி. இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சேண்பாக்கம் பகுதியில் 27 வயதான மைக்கேல் என்ற ஆட்டோ ஓட்டுநர் வசித்து வருகிறார். இவருக்கு மக்கான் பகுதியில் வசிக்கும் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் மகளுடன் பரத்துக்கு தொடர்பிருந்து வந்துள்ளத.
இதனால் அவ்வப்போது பரத் மற்றும் மைக்கேலிடையே வாக்குவாதங்களும், தகராறுகளும் ஏற்பட்டு வந்தன. புதிதாக வீடு கட்டிய பரத் நேற்று கிரகப்பிரவேசம் கொண்டாடினார். அதன் பின்னர் அவர் பெரியார் நகருக்கு சென்றார். அப்போது அவருக்கும் மைக்கேலுக்கும் மீண்டும் தகராறுகள் ஏற்பட்டன.
அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார் பரத்தை இரும்பு கம்பியால் மைக்கேல் சரமாரியாக அடித்து கொலை செய்தார். சம்பவமறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பரத்தின் உடலை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்த மைக்கேலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.