இன்று சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம்..! ஜோதிடர் பாலாஜி ஹாசனின் பகீர் கணிப்பு! என்ன தெரியுமா?

இன்னும் சில நாட்களில் நிகழப்போகும் சூரிய கிரகணத்தில் மிகப்பெரிய அழிவு ஒன்றை உலகம் சந்திக்கும் என்று பிரபல ஜோதிடர் ஒருவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்திலுள்ள மிகப்பெரிய ஜோதிடர்களில் ஒருவர் பாலாஜி ஹாசன். பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பேட்டிகளில் தன்னுடைய கணிப்புகளை எந்தவித தயக்கமும் இன்றி தன்னுடைய கணிப்புகளை வெளிப்படையாக பேசும் ஆற்றல் கொண்டவர். இதனால் இளம் வயதிலேயே இவர் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். சென்ற ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை முடிவுகளும் இவர் கூறியவாறே அமைந்திருந்தன.

இவருடைய கணிப்புகள் பிரபலமானதற்கு பின்னர் பல்வேறு அரசியல்வாதிகள், அதிபர்கள் முதலியோர் இவரிடம் கணிப்புகளை கேட்டுள்ளனர். எவ்வளவு பெரிய கணிப்பாக இருந்தாலும் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக கூறுவதை பண்பாக கொண்டுள்ளதாலேயே இவர் பிரபலமாகியிருப்பதற்கு காரணம் என்று பலரும் கூறுகின்றனர்.

இந்த சூரிய கிரகணத்தின் போது மிகப்பெரிய அழிவை உலகம் சந்திக்கும் என்று இவர் கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது "ஜோதிடத்தின்படி சூரியனை குறிக்கும் கிரகமானது அரசன், அரசியல்வாதி, உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், கலைத்துறையில் பிரபலமானோர் ஆகியோருக்கு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும்.

ராகு விபத்து காரகன் மற்றும் மரண காரகன் வருகிற 4 நாட்களில் நேர்கோட்டில் இணைந்து வருவதால் புகழ்பெற்றவர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இன்னும் 5 நாட்களுக்குள் உலகம் மிகப்பெரிய மரணம் ஒன்றை சந்திக்க நேரிடும். அந்த மரணம் நிகழ்ந்த பிறகு அதுகுறித்து உலகம் முழுவதும் பேசப்படும்" என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.