நானும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப் போகிறேன்! அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் கொரோனோ பரிசோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள போவதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உலகெங்கிலும் கொரோனோ வைரஸ் தன்னுடைய மிகப்பெரிய தாக்கத்தை பரப்பி வருகிறது. இதனால் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் உள்ள மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கில்லை.

இதுவரை அமெரிக்காவில் சுமார் 1700 பேருக்கு மேல் கொரோனோ தொற்று இருப்பது உறுதியாகும். அதுமட்டுமில்லாமல் இதுவரை 41 பேர் பரிதாபமாக இந்த நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அனைவரையும் பாதுகாப்பாக இருக்கும்படி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இதற்காக 50 பில்லியன் டாலர்களையும் ஒதுக்கி இருக்கிறார். இந்நிலையில் அதிபர் டொனால்டு டிரம்பை பார்ப்பதற்காக பிரேசில் நாட்டை சேர்ந்த அதிகாரி ஒருவர் வந்திருந்தார். அந்த அதிகாரிக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது.

ஆகையால் அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு கொரோனோ  அறிகுறிகள் இருக்கிறதா என ஆய்வு செய்து பார்க்க போவதாக கூறியிருக்கிறார். இதுவரை தனக்கு எந்த ஒரு அறிகுறியும் தெரியவில்லை எனவும் இருப்பினும் தான் தன்னை மருத்துவர்களிடம் சோதனை செய்து கொள்ளப் போவதாகவும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் டிரம்புக்கு கொரோனா தொற்று இருக்குமா என பலரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.