மனைவி தொடுத்த பலாத்கார வழக்கு! முகமது ஷமியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

முகமது ஷமிக்கு மேற்கு வங்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.


முகமது ஷமியின் மனைவி தொடர்ந்த பாலியல் தொந்தரவு மற்றும் வழக்கில் மேற்குவங்க நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அவர்களின் மனைவி அசின் ஜஹான் தொடுத்த வழக்கின் உத்தரவு வெளியாகியுள்ளது. அந்த தீர்ப்பில் முகமது சமியை கைது செய்வதற்கான பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஷமியின் மீது அவரது மனைவி பல குற்றங்களை அடுக்கினார். இந்த வழக்கின் விசாரணை சில ஆண்டுகளாகவே நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இன்று இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனை அடுத்து ஷமி மற்றும் அவரது சகோதரர்களுக்கும் சகோதரர் இருவருக்கும் சேர்த்து பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. ஷமி தற்போது இந்தியாவில் இல்லாத காரணத்தால் அவர் 15 நாட்களுக்குள் ஆஜராக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முகமது ஷமி தற்போது இந்திய அணியின் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியை தொடரானது நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து ஷமி இந்தியாவுக்கு திரும்ப உள்ளார் .

அவர் இந்தியாவிற்கு திரும்பும்போது விமான நிலையத்திலேயே கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.