வானில் திடீரென வரிசை கட்டிய மர்ம வெளிச்சம்..! வேற்று கிரகவாசிகள் ஊடுறுவல் என பரவிய பகீர் தகவல்..! திக் திக் பின்னணி!

பிரான்சில் வானில் தொடர் வண்டி போல் காட்சியாளித்த ஒரு ஒளிக் கோடுயினை கண்ட பொது மக்கள் அனைவரும் ஏலியன்கள் படை கொண்டு பூமியை தாக்க முயற்சி செய்கின்றது என்று அச்சத்தில் ஆழ்ந்தனர்.


பின்னர் உண்மை அறிந்த அது ஏலியன் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இந்த செய்தி அப்பகுதியில் மிகவும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. SpaceX என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்ளும் நிறுவனத்தை தொழிலதிபரான எலான் மஸ்க் என்பவர் நடத்தி வருகிறார். இந்த் விண்வெளி ஆய்வு கூடங்களில் இருந்து, அந்த நிறுவனம் 60 விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. 

இந்நிலையில், இந்த விண்கலங்கள்தான் வானில் தொடர் வண்டி போல் வரிசையாக அமைந்து ஒரு ஒளிக் கோடு போல தோன்றி உள்ளது.இதனை கண்ட பொது மக்கள் ஏலியன்கள் தான் என்று எண்ணி உள்ளார்கள். இந்த வதந்திகளை தவிர்க்க விண்வெளி ஆராய்ச்சியாளரான Franck Selsis என்பவர் வானில் காணப்பட்ட அந்த ஒளிக்கோட்டின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, அதன் கீழ் அது குறித்த விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த விளக்கத்தில். அந்த விண்கலங்கள் உண்மையில் பல நாட்கள் வானில் இருக்கும் என்றாலும், தட்பவெப்பநிலை மற்றும் மேகங்கள் ஆகியவை காரணமாக அவற்றை நம்மால் பார்க்க முடியாமல் போய்விடுகிறது என்று கூறும் Selsis, கூறினார். மேலும், அவை தாழ்ந்த வட்டப்பாதையில் இருப்பதால், பூமிக்கு அருகில் இருப்பதால், அவற்றை நம்மால் இப்போது நன்றாகப் பார்க்க முடிகிறது என்கிறார்.

இந்த ஆராய்ச்சியின் மூலம் விண்கலங்களை வானில் செலுத்த முக்கிய நோக்கம் 6G இணைய சேவையை அமைப்பதற்காக மட்டும் தான் என்றும் அவர் கூறிப்பிட்டு உள்ளார். என்றாலும், அதிக விண்கலங்களை வானில் செலுத்துவது நல்லதல்ல என்றும், அவை நமது வானத்தை முற்றிலும் மாசு படுத்திவிடும், ஒரு அளவுக்கு மேல் போகும்போது நம்மால் நட்சத்திரங்களைப் பார்க்க முடியாமல் போய்விடும் என்று எச்சரிக்கிறார்.

 மேலும், ஏலியன்கள் என்பதே இல்லை. அது ஒரு கட்டு கதை என்றும், ஆனால் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் மட்டும் இதனை ஏற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உலகில் உள்ள மற்ற ஆராய்ச்சியாளர்கள் ஏற்று கொள்ளவில்லை.