42 வயது! கணவரை இழந்து சில மாதங்கள் தான்! சீனியர் நடிகையின் கடற்கரை கவர்ச்சி புகைப்படம் வெளியானது!

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது .


அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார். இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன் , உத்தமபுத்திரன் ,காதலில் சொதப்புவது எப்படி ,எதிர்நீச்சல் ,மெர்சல் ,விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார். நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 

42 வயது துணை நடிகை சுரேகா வாணிக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர் . சமீபத்தில் இவரது கணவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது . அதாவது கடற்கரையில் தண்ணீரில் ஆட்டம் போடும் விதமாக இருக்கிறது அந்த புகைப்படம் . கவர்ச்சிக்கு சற்றும் குறைவு இல்லாத வண்ணம் அந்த புகைப்படம் காட்சியளிக்கிறது.

சுரேகா வாணியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடித்த சுரேகா வாணியா இது ? என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர் .