ஈழத் தமிழருடன் திருமணம்! விவாகரத்து வரை சென்ற வாழ்க்கை! ரம்பா இப்போது என்ன ஆனார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை ரம்பா தற்போது கனடாவில் தனது கணவர் குழந்தைகள் என செட்டிலாகி மகிழ்ச்சியாக தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.


நடிகை ரம்பா உழவன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் பின்னர் விஜய் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ்த் திரையுலகில் சிறந்த நடிகையாக வலம் வந்தார் இவருடைய அழகான நடிப்பிற்காக மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இவருக்குக் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து நடிகை ரம்பா இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை காதலித்து கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இவர்களது திருமணம் அவர்களது பெரியோர்களின் சம்மதத்துடன் வெகுவிமர்சையாக நடைபெற்றது இவர்கள் இருவருக்கும் திருமணமாகி கனடா நாட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நடிகை ரம்பாவுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு லாவண்யா என்ற பெண் குழந்தை பிறந்தது. அடுத்து 2018 ஆம் ஆண்டு சாஸ்தா என்ற இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. இரு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் ரம்பாவுக்கும் அவரது கணவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தது.

இதனை தொடர்ந்து இருவரும் தங்களுடைய கணவன் மனைவி பந்தத்தை சட்டப்படி முடித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தனர். பின்னர் இருவரும் தங்களுக்குள் பேசி சமாதானம் செய்துகொண்டு ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். இந்நிலையில் நடிகை ரம்பா கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜய் ஆவார். தன்னுடைய குடும்பத்தினருடன் எடுக்கும் புகைப்படங்களை பதிவிடுவதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருக்கிறார் அந்த வகையில் என் அன்பான கணவருடன் அழகான குழந்தைகளுடனும் கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.