சிம்ரன் தங்கை தற்கொலையில் பரபரப்பு தகவல்! நடிகை மும்தாஜ் - நடிகர் ரியாஸ் - கலா மாஸ்டருக்கு உள்ள பகீர் தொடர்பு?

நடிகை மோலனின் தற்கொலைக்கு காரணம் கலா மாஸ்டரின் தம்பி பிரசன்னா தான் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன் ஆவார். நடிகை சிம்ரன் தங்கை மோனல், கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த "பார்வை ஒன்றே போதுமே" என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் மிகக்குறைந்த திரைப்படங்களில் மட்டுமே நடித்த நடிகை மோனல் யாருமே எதிர்பாராத விதமாக திடீரென்று கடந்த 2002ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதனையடுத்து நடிகை மோனல் நடிகர் குணாலை காதலித்து வந்ததாகவும் அவரால்தான் நடிகை மோனல் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது நடிகை மோனல் குணாலை காதலிக்கவில்லை என்றும் அவர் நடன இயக்குனர் கலா மாஸ்டரின் தம்பியான பிரசன்னாவை காதலித்து வந்தார் என்றும் சமீபத்திய தகவல்கள் கூறுகிறது. 

மேலும் இவர்களின் காதலை கலா மாஸ்டரின் வீட்டார் ஏற்றுக் கொள்ளாததால் பிரசன்னா, மோனலின் காதலை முறித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நடிகை மோனல் அடுத்த இரண்டே நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நடிகை சிம்ரன் பேட்டி ஒன்றில் பேசும்போது கூறியது குறிப்பிடத்தக்கது. நடிகை மோனல் தற்கொலை செய்து கொண்டபோது அவரது சகோதரியான நடிகை சிம்ரன் கனடாவிற்கு பஞ்சதந்திரம் படப்பிடிப்பிற்காக சென்றிருக்கிறார்.

மோனல் தற்கொலை செய்துகொண்ட விஷயத்தை அறிந்ததும் கலா மாஸ்டரின் பேச்சைக் கேட்டு மும்தாஜ் மோனலின் இல்லத்திற்கு சென்று தடயங்கள் சிலவற்றை அழித்து விட்டதாகவும் நடிகை சிம்ரன் போலீசாரிடம் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நடிகர் ரியாஸ் மற்றும் மும்தாஜ் ஆகியோர் இணைந்து கோடம்பாக்கத்தில் உள்ள மோனலின் இல்லத்திற்கு சென்று 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது டைரி ஆகியவற்றை எடுத்துச் சென்றதாகவும் புகார் அளித்திருக்கிறார்.

பின்னர் செல்போன் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு பேசிய போது மோனல் இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பு நடிகர் ரியாஸ் இடம் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிம்ரன் கூறும் இந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால் நடிகை மும்தாஜ் கலா மாஸ்டரும் நெருங்கிய தோழிகள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆகையால்தான் மும்தாஜ்க்கு சரியான படவாய்ப்புகள் அமையாத காரணத்தால் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக கலா மாஸ்டர் அவரை பங்கேற்க செய்தார். 

கலா மாஸ்டரும் நடிகை மும்தாஜும் நெருங்கி பழகுவதை பார்க்கும் பொழுது நடிகை சிம்ரன் சொல்லும் குற்றச்சாட்டுகள் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.