தூங்கிக் கொண்டிருக்கும் மகள் மீது சிறுநீர் கழிக்கும் வக்கிரம் பிடித்தவன் ஈஸ்வர்! மனைவி வெளியிட்ட பகீர் தகவல்!

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது அவரது மனைவி நடிகை ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்துள்ளார்.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட கல்யாணப்பரிசு சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ஆவார். இவரது மனைவி ஜெயஸ்ரீ , சின்னத்திரையில் வம்சம் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

நடிகை ஜெயஸ்ரீயும் நடிகர் ஈஸ்வரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டு திருவான்மியூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். ஜெயஸ்ரீ ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்தவர். அவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

அந்த பெண் குழந்தை இருப்பது தெரிந்தே ஈஸ்வர் ஜெயஸ்ரீயை திருமணம் செய்தார். சமீப காலமாகவே இந்த தம்பதியினருக்கு இடையில் கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் நடிகை ஜெயஸ்ரீ அடையாறு காவல் நிலையத்தில் தன் கணவர் மீது புகார் அளித்துள்ளார்.

அதாவது தன்னுடைய கணவர் அவருடைய தாயாரின் பேச்சைக் கேட்டு தன்னை கொடுமை படுத்தி வருகிறார் என்று கூறியுள்ளார். மேலும் வேறு ஒரு தொலைக்காட்சி நடிகையுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைபடுத்துவதாகவும் நடிகை ஜெயஸ்ரீ அந்த புகாரில் கூறியிருக்கிறார்.

மேலும் தன்னிடம் இருந்து பெற்றுக்கொண்ட 30 லட்சம் ரூபாய் பணம், நகைகள் ஆகிய அனைத்தையும் திரும்பப் பெற்றுத் தருமாறு அந்த புகாரில் கிடைக்க ஜெயஸ்ரீ கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புகாரை அடுத்து ஈஸ்வரை சேர்ந்த சில பேர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் நடிகை ஜெயஸ்ரீ இன்றைய தினம் போலீஸ் கமிஷனரிடம் புதிய புகார் ஒன்றையும் கூறியிருக்கிறார். 

அதுமட்டுமில்லாமல் நடிகர் ஈஸ்வருக்கு குடிப்பழக்கமும் கஞ்சா பழக்கமும் அதிகரித்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும் சூதாட்டத்தில் தற்போது அவர் ஈடுபட்டு வருவதால் அதிக பணத்தை அதில் செலவிட்டிருக்கிறார் . இதனால் மிகப்பெரிய கடன் சுமைக்கு ஆளாகியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வர் அந்த கோபத்தை தன்னுடைய மனைவி மீது காட்டி அவரை தாக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் மகளிடமே பாலியல்ரீதியான சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் அவரது மனைவி நடிகை ஜெயஸ்ரீ அந்த புகாரில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மீது ஈஸ்வர் சிறுநீர் கழிக்கும் அளவிற்கு கொடூரத்தை அரங்கேற்றியுள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார் ஜெயஸ்ரீ.

மேலும் பிரபல சின்னத்திரை நடிகை ஒருவருடன் இணைந்து கொண்டு அடிக்கடி வீடியோ கால் பேசிவருகிறார் என்று நடிகர் ஈஸ்வர் மீது தன்னுடைய மனைவி புகார் அளித்துள்ளார் மேலும் இத்தகைய செயலால் தன் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.