பிரபல நடிகை அதுல்யா தனது நாய் குட்டியுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
என்னமா இப்படி பண்றீங்களே..! நாயை உடம்பில் உட்கார வைக்கும் இடமா அது! இளம் நடிகையின் புகைப்படம்!
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அதுல்யா ரவி. ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, கேப்மாரி , நாடோடிகள் 2 என பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார். இவர் சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார்.
தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகை அதுல்யா தன்னுடைய வீட்டில் தனது குடும்பத்தினருடன் லாக்டவுன் நாட்களை கழித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அதுல்யா ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் நடிகை அதுல்யா குட்டி ஷார்ட்ஸ் அணிந்து தனது நாய்க்குட்டியை தன் தொடை மீது வைத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் பல்வேறு விதமாக கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.