முந்தைய திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது விலகிய காஜல் அகர்வாலின் ஆடையை பார்த்ததாக கூறப்படும் பிரபல நடிகருடன் மீண்டும் புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகை காஜல்அகர்வால் ஒகே சொல்லி இருப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் விலகிய காஜல் அகர்வால் ஆடை..! குறுகுறுவென பார்த்த ஹீரோ..! அவருக்கே மீண்டும் வாய்ப்பு கொடுத்த நடிகை!
நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் குறிப்பாக தமிழில் அஜித், விஜய் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய எதிர்கால பட வாய்ப்புகளில் கவனத்துடன் இருந்து வருகிறார்.
அந்தவகையில் நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் "பாரிஸ் பாரிஸ்" ஆகும். இந்த திரைப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் பல திரைப்படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜீவாவின் "ஜெமினி கணேசன்" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் முத்து குமார் இயக்கவுள்ளார்.
இத் திரைப்படத்தில் முதன் முறையாக நடிகை தமன்னா, ஜீவாவுடன் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சத்யராஜ் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர் இமான் இசையமைக்க அமைக்க உள்ளார்.
நடிகர் ஜீவாவும் நடிகை காஜல் அகர்வாலும் இணைந்து "கவலை வேண்டாம்" என்ற திரைப்படத்தில் முதன் முறையாக இணைந்து நடித்து இருந்தனர். அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது பல சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கியது. படப்பிடிப்பின்போது நடிகை காஜலின் ஆடை விலகிய போது அதனை நடிகர் ஜீவா பார்த்ததாக சர்ச்சையை கிளப்பும் வகையில் கூறப்பட்டு வந்தது.
இத்தகைய சூழ்நிலையில் நடிகர் ஜீவாவுடன் நடிகை காஜல் அகர்வால் இணைந்து மீண்டும் நடிப்பது என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த செய்தியானது சமூக தளத்தில் வைரலாக பரவி வருகிறது.