சீரியல் நடிகை வைஷ்ணவி தற்கொலை..! டார்ச்சர் செய்த திருமணமான நடிகர்? நடந்தது என்ன? பேரதிர்ச்சியை ஏற்படுத்திய தகவல்!

கடந்த 2006ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட வைஷ்ணவியின் மரணத்திற்கு சீரியல் நடிகரானாரன தேவ் ஆனந்த் காரணம் கிடையாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2006-ம் ஆண்டு சீரியல் நடிகை வைஷ்ணவி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வைஷ்ணவி தற்கொலைக்கு அவருடன் சீரியலில் ஒன்றாக நடித்த தேவ் ஆனந்த் என்பவர் தான் காரணம் என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் சீரியல் நடிகரான தேவை கைது செய்தனர்.

அதாவது அந்த புகாரில் நடிகை வைஷ்ணவியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுவதாகவும் அதனை வைஷ்ணவி நிராகரித்து விட்டதாகவும் கூறப் பட்டிருந்தது. அப்படி இருந்தபோதும் தொடர்ச்சியாக வைஷ்ணவியை, தேவ் டார்ச்சர் செய்து வந்திருக்கிறார். இந்த டார்ச்சரை தாங்க முடியாமல் தான் வைஷ்ணவி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசில் அளித்த புகாரில் குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்றம், தேவ் ஆனந்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டது. ஆனால் தேவ் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பில் இருந்து இடைக்காலத் தடையும் பெற்றுக்கொண்டார்.

 இந்நிலையில் தேவ் ஆனந்த் மேல்முறையீடு செய்து இருந்தால் வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆனந்தின் 5 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்து விட்டது. இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரவலாக பேசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.