பிரபல நடிகர் பாலா சிங் கவலைக்கிடம்! பிரார்த்தனையில் குடும்பத்தினர்!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகர் பாலாசிங் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தமிழ் சினிமாவில் முதன் முதலில் நாசரின் இயக்கத்தில் வெளியான அவதாரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் பாலா சிங். இதைதொடர்ந்து பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் என்று கூறலாம்.

சினிமா திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மேடை நாடகங்களிலும் நடித்து பிரபலமான பாலாசிங். விருமாண்டி, புதுப்பேட்டை போன்ற திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நட்சத்திரமாக மாறினார். 

இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான என்ஜிகே மகாமுனி போன்ற திரைப்படங்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பாலா சிங் காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் விரைவில் உடல் நலம் சரியாகி வீடு திரும்ப வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.