நைட்டி அணிந்த பெண்ணுடன் உல்லாசம்! பெரியகுளம் வேட்பாளர் கதிர்காமு வீடியோ ரிலீஸ்! பெரும் சிக்கலில் தினகரன்!

சென்னை: நைட்டி அணிந்த பெண் ஒருவர் பெட்ரூமுக்குள் வருவது போலவும், அவருடன் டாக்டர் கதிர்காமு ஜாலியாக இருப்பது போலவும் உள்ள வீடியோதான் பலமான ஆதாரமாக சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


வழக்கமாக பெண் விவகாரத்தை கையில் வைத்து கொண்டு எதிர்தரப்புக்கு மிரட்டல் விடுப்பது அமமுகவின் வழக்கம்! ஆனால் இந்த முறை அந்த பொறியில் அவர்களே விழுந்துவிட்டதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது!

ரகசிய வீடியோ  ;-   நைட்டி அணிந்த பெண் ஒருவர் அந்த பெட்ரூமுக்குள் வருகிறார். அவருடன் கதிர்காமு ஜாலியாக இருக்கிறார். இதனை யாரோ ரூம் கதவின் சாவி துவாரம் வழியே ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோவும் ரொம்ப தெளிவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில்தான் ஆபாச பிரச்சனை எழுந்துள்ளது. கதிர்காமு பெண் ஒருவருடன் ஜாலியாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி அமமுக தரப்பினரை கலக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வீடியோவில், கதிர்காமு உருவம் நன்றாக தெரிகிறது. பெட்ரூமில் கட்டில், பீரோ இருக்கிறது. கட்டில் பக்கத்தில் பனியனுடன் கதிர்காமு நின்று கொண்டிருக்கிறார். நெற்றியில் விபூதியும் உள்ளது! 

நைட்டி அணிந்த பெண் ஒருவர் அந்த பெட்ரூமுக்குள் வருகிறார். அவருடன் கதிர்காமு ஜாலியாக இருக்கிறார். இதனை யாரோ ரூம் கதவின் சாவி துவாரம் வழியே ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோவும் ரொம்ப தெளிவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. 

இந்த வீடியோவை எடுத்தது யார் என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோதான் இப்போது மிகப்பெரிய ஆதாரமாக சிக்கி உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் பெரியகுளம் போலீசில் புகார் அளிக்க, வழக்கும் பதிவு செய்யப்பட, விசாரணையும் போய் கொண்டு இருக்கிறது. 

திட்டமிட்ட சதி, அரசியல் சூழ்ச்சி என்று கதிர்காமு சொன்னாலும், ஆதாரம் வலுவாக இருந்தால் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது. 

பெரிய சிக்கல்  ;-   எவ்வளவோ கஷ்டப்பட்டு, கட்சியை டிடிவி தினகரன் தேற்றி முன்னுக்கு வந்து கொண்டு வருகிறார். இப்போதுதான் சின்னமே கிடைத்து, அதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று திணறி வருகிறார். இந்த மாதிரி நேரத்தில் இப்படிப்பட்ட தேவையில்லாத பிரச்சனைகளால் அமமுகவுக்கு தேவையில்லாத தலைவலி ஏற்பட்டுள்ளது. அதனால் வீடியோ ஆதாரம் உண்மைதானா? கதிர்காமு நிரபராதிதானா? என்பதெல்லாம் முழு விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும்.