கைக்குழந்தையுடன் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட தந்தை - மகன்..! நெஞ்சை உலுக்கும் காரணம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் தந்தையும் மகனும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அதிகமாக பழங்குடி மக்கள் வசித்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் வாழ்ந்து வருபவர் ராம் லால். இவர் ஷகொரி என்பவருடன் ஒன்றாக இணைந்து திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறார். பொதுவாகவே ஜார்கண்ட் மாநிலத்தில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்வதை தங்களுடைய வழக்கமாக கொண்டுள்ளனர்.

ராம் லால் மற்றும் ஷகொரி ஆகியோருக்கு ஒரு மகன் உள்ளார். அந்த மகன் வேறு ஒரு பெண்ணுடன் ஒன்றாக இணைந்து திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அவர்கள் இருவருக்கும் ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

அந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் இவர்களைப் பற்றி தெரிந்து கொண்டது. பின்னர் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து அவர்களை அணுகியது .இவர்களும் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளனர் .இதனை அடுத்து தந்தை மற்றும் மகன் ஆகிய இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றுள்ளது .இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.