ஒரே நேரத்தில் பலருடன் தாய் செக்ஸ் உறவு! நேரில் பார்த்த மகன் எடுத்த கொடூர முடிவு!

புதுச்சேரியில் தாயைக் கொலை செய்ததோடு சடலத்துடனேயே 7 நாட்கள் வீட்டில் தனியாக இருந்த மகன் பின்னர் காவல்துறையில் சரண் அடைந்தார்.


புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த அமலோற்பவநாதன். இவரது தந்தை இறந்த நிலையில் தனது தாய் ஜெயமேரியுடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரையும் கடந்த சில நாட்களாகக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அமலோற்பவ நாதன் தன் தாயை தான் கொலை செய்துவிட்டதாகக் கூறி லாஸ்பேட்டை காவல் நிலைய்யத்தில் நேற்று முன் தினம் சரணடைந்தார். அவரது வீட்டுக்குச் சென்று ஜெயமேரியின் சடலத்தை மீட்ட போலீசார் இது தொடர்பாக அமலோற்பவநாதனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தனது தாய் ஜெயமேரியை கடந்த வாரமே கொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. மேலும் தாயின் சடலத்தை 7 நாட்களாக வீட்டுக்குள் மறைத்து வைத்து சடலத்துடனெயே வசித்ததாக அமலோற்பவநாதன் தெரிவித்தார். 

மேலும் தந்தை இறந்த பின் தனது தாய் ஜெயமேரிக்கு பலருடன் தகாத உறவு இருந்ததாக அமலோற்பவநாதன் தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இதனால் வெறுப்பின் உச்சத்தில் தான் தனது தாயைக் கொலை செய்ததாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் தான் இருக்கும் போதே தாயை சந்திக்க பல ஆண்கள் வந்ததாகவும் இதனால் தான் கொலை செய்ததாகவும் அவன் கூறியுள்ளான். இதனிடையே அமலோற்பவநாதன் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று சொல்கிறார்கள்.