இளம் பெண் கற்பழிப்பு! வீடியோ இணையதளத்தில் பதிவேற்றம்!

இளம் பெண்ணை கற்பழித்து வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றிய நபர்கள் சிக்கியுள்ளனர்.


உத்தரபிரதேச மாநிலம்  மாநிலம் முசாஃபர்பூர் நகரை சேர்ந்தவர் ஜில்லத்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த திங்கட் கிழமை 23 வயதான ஜில்லத் தனது தந்தைக்கு உணவு கொடுக்க சென்று கொண்டிருந்தார்.

 

   அப்போது ஜில்லத்தை வழிமறித்த இரண்டு பேர் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜில்லத் அவர்களை வசைபாடிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றார்.

 

   ஆனால் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு பேரும் ஜில்லத்தை வலுக்கட்யமாக பிடித்து இழுத்துச் சென்று கதற கதற கற்பழித்துள்ளனர். இளம் பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த இருவர் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றினர்.

 

   மேலும் நடந்ததை வெளியில் சொன்னால் விளைவுகள் விபரீதமாகிவிடூம் என அவர்கள் மிரட்டியதால் அந்தப் பெண் யாரிடமும் சொல்ல அஞ்சி இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

   இந்நிலையில் இணையதளத்தில் வீடியோவை பார்த்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை அடையாளம் கண்டு அந்தப் பெண்ணின் சகோதரரிடம் புகார் பெற்றனர்.

 

   வீடியோவின் அடிப்படையில் அகிப், சஜித் என்ற இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.