இலங்கையில் ஒரே நேரத்தில் 7 இடங்களில் குண்டு வெடித்ததால் அந்நாடு முழுவதும் பரபரப்பாக உள்ளது.
ஒரே நேரத்தில் 7 இடங்களில் குண்டு வெடித்தது! 200 பேர் பலி! 300 பேர் காயம்! மீண்டும் விடுதலைப் புலிகள்? மரண பீதியில் இலங்கை!

இலங்கையில் இன்று பரவலாக பல இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துளதாக தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளன. இதன்படி மட்டக்களப்பிலுள்ள பிரதான தேவாலயமொன்றிலும் சற்றுமுன்னர் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுலதாகவும் இதனால் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மட்டக்களப்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் நட்சத்திர விடுதிகள், நீர்கொழும்பு தேவாலயம் உளிட்ட பல இடங்களிலும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் இலங்கையின் பல பாகங்களிலும் கடுமையான பதறம் நிலவிவருவதுடன் தீவிர பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த குண்டுவெடிப்பில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 300 பேர் காயம் அடைந்துள்ளன. இந்தகுண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் வந்துவிட்டார்களா என்று சிங்களவர்கள் மரண பீதியில் உள்ளனர்.