வெளிநாட்டில் இருக்கும் தமிழர்! 6 வயது மகளின் அலாதி ஆசை! நிறைவேற்ற செய்த நெகிழ வைக்கும் செயல்!

தமிழர்களின் பாரம்பரிய கலையான கரகாட்டத்தை கற்றுக்கொள்ளும் மாணவி.


தமிழகத்தின் திருவாரூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி.இவரது மகள் தனஸ்ரீ(6).பழனிச்சாமி தனக்கென்று சொந்தமாக குவைத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இதனால் இவருடன் அவரது குடும்பத்தினரும் தங்கி வருகின்றனர்.

இவர் மகள் குவைத்தில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பழனிச்சாமிக்கு தனது மகளுக்கு கரகாட்டத்தை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று ஆசை. அதனால் இவர் தஞ்சையை சேர்ந்த கரகாட்ட கலைஞர் தேன்மொழி ராஜேந்திரனிடம் பயிற்சிக்காக சேர்த்துள்ளார்.

மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் குவைத்தில் இருந்து தஞ்சை வந்து தனஸ்ரீ கரகாட்டத்தை கற்றுக்கொள்கிறார். பலகை மேல் ஆடுதல்,தட்டு மேல் ஆடுதல் என பலவகையான பயிற்சி அவருக்கு அளிக்கப்பட்டது.மேலும் பள்ளியில் ஆண்டு விழாவில் தனஸ்ரீ கரகாட்டம் ஆடிய வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் தனஸ்ரீ இதுகுறித்து கூறுகையில் தமிழர்களின் பாரம்பரிய கலையான கரகாட்டத்தை கற்று இளம் தலைமுறையினர் அதை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.