குளுகுளு கொடைக்கானலில் குறைந்த விலை அழகிகள்..! குட்டி குட்டி காட்டேஜ்களில் விபச்சாரம் ஜரூர்! அதிர்ந்த போலீஸ்!

6 வடமாநில அழகிகளை கொண்டு கொடைக்கானலில் காட்டேஜ்களில் விபச்சாரம் அரங்கேறியுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


"மலைகளின் இளவரசி" என்று கொடைக்கானல் அழைக்கப்படும். சுற்றுலா பயணிகள் வருவதை மிகவும் விரும்புவர். அவர்களுக்கென்று அனைத்து வசதிகளையும் கொண்ட காட்டேஜ்கள் இயங்கி வருகின்றன. நாகை மாவட்டத்திலுள்ள சீர்காழி பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார். இவருடைய வயது 40. இவர் சுற்றுலாவுக்காக கொடைக்கானல் வந்திருந்தார்.

கொடைக்கானல் சென்றவுடன் அறைகளை தேடி அடைந்துள்ளனர். அப்போது நபர் ஒருவர் தன்னிடம் குறைந்த விலையில் ஏசி வசதியுடன் கூடிய அறைகள் வாடகைக்கு இருப்பதாக கூறியுள்ளார். மோகன்குமார் மற்றும் அவரது நண்பர்களை அட்டுவம்பட்டி கிரஸ் பகுதிக்கு அந்த மர்ம நபர் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்த குடிலில் விபச்சாரம் நடப்பதாக சந்தேகமடைந்தார் மோகன்குமார். உடனடியாக அப்பகுதி காவல்துறையினருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு புகாரளித்தார்.

உடனடியாக அப்பகுதி காவல்துறையினர் அந்த குடிலுக்கு விரைந்து சென்றனர். சோதனை நடத்தியதில் பிரேம்குமார் கூறியவாறு, 6 வட மாநில அழகிகளை வைத்து மோகன்ராஜா என்பவர் விபச்சாரம் நடத்தி வந்துள்ளார். இதையடுத்து மோகன் ராஜா மற்றும் இந்த பாலியல் தொழிலில் நிர்வகித்து வந்த அவருடைய நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். ஆனால் மோகன்ராஜா மட்டுமே காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.

அவருடன் தொழிலில் ஈடுபட்டு வந்த ஸ்டீபன் மற்றும் கோசலை ராஜன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்த கார் மற்றும் 4 செல்போன் கதையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 6 வடமாநில அழகுகளையும் மீட்ட காவல்துறையினர், அவர்களை காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.  இந்த சம்பவமானது கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.