உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 5 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்கார்ம் செய்த உறவினனை போலீசார் கைது செய்துள்ளனர்.
5 வயதுச் தங்கையை கடத்தி பாலியல் வல்லுறவு! சகோதரன் செய்த நெஞ்சை உறைய வைக்கும் செயல்!

காசியாபாத் நகரைச் சேர்ந்த தம்பதி தங்கள் மூன்று குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. திரும்பி வந்து பார்த்த போது தங்களது 5 வயது மகளை காணாததால் மற்ற இரு குழந்தைகளிடம் அது குறித்து கேட்டபோது அவர்களுக்கு அது குறித்து எதுவும் தெரியவில்லை
எங்கு தேடியும் தங்கள் மகளைக் காணாததால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் அருகில் உள்ள சரனா என்ற கிராமத்தில் சிறுமியின் உடலைக் கண்டுபிடித்தனர். சுற்றுவட்டார சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்த போது அவர்களின் சகோதரனான மகாஜன் என்பவன் சிறுமியை தூக்கிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவனைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது அவன் உண்மைகளை ஒப்புக்கொண்டான். சிறுமி தனது வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அப்போது சிறுமி அலறியதால் கழுத்தை நெறித்துக் கொன்றதாகவும் அவன் ஒப்புக்கொண்டான்
மகாஜன் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவனைக் கைது செய்தனர்.