பிரபல கானா பாடகரின் மகன் 10 வயது மூத்த பெண்ணை 2-வது திருமணம் செய்துகொண்ட சம்பவமானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் மனைவிக்கு அடி உதை..! 10 வயது மூத்த கள்ளக்காதலியுடன் சல்லாபம்! சினிமா பாடகரின் பகீர் செயல்!
வடசென்னையில் புளியந்தோப்பு எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள ராஜா தெருவில் பழனி என்ற பிரபல கானா பாடகர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகனின் பெயர் தரணி. இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயாபானு என்ற பெண்ணை கடந்த ஜூலை மாதத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் விஜயபானுவை 5 வருடங்களாக காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், தன் மனைவியிடம் 20 சவரன் நகைகளை வரதட்சணையாக பெற்றுள்ளார். அதனை அடகு கடையில் அடமானம் வைத்தார். மேலும் 30 சவரன் நகைகளை வரதட்சணையாக தரவேண்டுமென்று அவரை கொடுமைப்படுத்தியுள்ளார்.
நித்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர் தன்னை விட 10 வயது மூத்தவர். இருவருக்கும் கடந்த மூன்றாண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. நித்யாவிற்கு ஏற்கனவே திருமணமாகியது. இத்தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
இதனிடையே தான் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதை மறைத்து தரணி, அடுத்த சில நாட்களிலேயே தரணி 2-வது திருமணம் செய்து கொண்டதை விஜயபானு கண்டுபிடித்துள்ளார். தரணியின் செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது விஜயபானுவுக்கு உண்மை தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, விஜய பானு அடிஉதை வாங்கியுள்ளார். உடனடியாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் தரணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவமானது புளியந்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.