120 பிளாஸ்டிக் பைகளில் 44 பேரின் துண்டு துண்டாக்கப்பட்ட உடல்கள்! உலகை உலுக்கிய திகில் சம்பவம்!

கிணற்றில் பிளாஸ்டிக் பைகளில் மனித சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மெக்ஸிகோ நாட்டையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.


மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்க்கோ மாகாணத்தில் குவடலஜொரோ நகரில் உள்ள பழைய கிணறு ஒன்று தொடர்ந்து சில தினங்களாக துர்நாற்றம் வந்து கொண்டிருப்பதாக அருகிலுள்ள காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர் இந்த புகாரின் அடிப்படையில் கிணற்றில் தூர்வாரிய போலீசாருக்கு பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.

கிணற்றில் சுமார் 120 பிளாஸ்டிக் பைகளில் உடலின் வெட்டப்பட்ட பாகங்கள் கிடந்தன இதை வைத்து பார்க்கையில் 40க்கும் மேற்பட்டோர் கொலை செய்து இங்கு வீசப்பட்டு இருக்கலாமென கூறப்படுகிறது.

குவடலஜொரோ நகரில் போதைப் பொருள் விற்கும் கும்பலுக்கு இடையே நடக்கும் மோதலில் பலர் கொல்லப்படுகின்றனர் அவர்களில் சிலர் வெட்டப்பட்டு இந்த கிணற்றில் வீசப்பட்டு இருக்கலாம் என போலீசார் யூகிக்கின்றனர். இதை உறுதி செய்ய தடயவியல் வல்லுனர்கள் மூலம் தொடர்ந்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.