யோகா செய்வதற்கு செலவு 40 கோடி ரூபாயா? சபாஷ் மோடி!

மோடி அரசு வந்தால் ஒரு திட்டத்துக்கு செலவிடுவதைவிட, அதைப் பற்றி விளம்பரப்படுத்தவே அதிகம் செலவிடப்படும் நிலை உண்டாகும் என்பார்கள்.


அது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 21ம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமையில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். இந்த யோக தினத்திற்காக ரூ.40 கோடி செலவிடப்பட்டுள்ளதாக ஆயுஷ் அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஹோமியோபதி (ஆயுஷ்) அமைச்சகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி கடந்த ஆண்டு யோக நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்த தொகையை ஒப்பிடும் போது இந்தாண்டு, இரண்டு மடங்கு அதிகமாக செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.  கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகம் என்றும், கடந்த ஆண்டு இது 20 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு 20 கோடி செலவு செய்ததாகவும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செலவு மட்டும் ரூ.73 கோடியும் செலவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் ஆர்.டி.ஐ கேள்வி மூலம் தெரிய வந்துள்ளது. இந்த யோகா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் யோகா செய்வதற்கான மேட், போக்குவரத்து ஏற்பாடுகள் செய்தது, விருந்தினருக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு செய்துகொடுத்தால் போன்றவற்றிகாக இந்த செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அது போக யோக பயிற்சி செய்தவர்களுக்கு அதிக கலோரிகள் கொண்ட சிற்றுண்டி மற்றும் இனிப்பு வகைகள் வழங்கப்பட்டுள்ளது. உடல் எடையைக் குறைக்கவும், சீராக வைக்கவும் வழங்கப்படும் யோகா பயிற்சியின் போது இப்படிப்பட்ட உணவு வகைகள் கொடுக்கப்பட்டது ஏன் என்ற முரண் எழுகிறது. இதுவரையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் "சர்வதேச யோகா தினம்" கொண்டாட ஆயுஷ் அமைச்சகம் மொத்தம் ரூ.140 கோடியை செலவு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாஷ் மோடி