4 சிறுவர்கள் சேர்ந்து 8 வயது சிறுமியுடன் பாலியல் வல்லுறவு! அதிர வைக்கும் காரணம்!

ஜெய்ப்பூர்: ஆபாச படம் பார்த்துவிட்டு, 8 வயது சிறுமியை, 4 மைனர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றி டைம்ஸ் நவ் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:

சதார் போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 4 மைனர் சிறுவர்கள், கடந்த மே 1ம் தேதியன்று, கூட்டு சேர்ந்து ஆபாசப் படம் பார்த்துள்ளனர். இதன்பேரில், தங்களது அண்டை வீட்டில் வசிக்கும் 8 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று, அவர்கள் கூட்டு சேர்ந்து வன்கொடுமை செய்திருக்கிறார்கள். இதனால், சிறுமிக்கு கடும் வயிற்று வலி ஏற்படவே, அவர் தனது தாயிடம் கூறியிருக்கிறார். 

இதையடுத்து, மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக, உறுதி செய்யப்பட்டது. இதன்பேரில், போலீசில் புகார் அளிக்கவே, அந்த 4 மைனர் சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

இவ்வாறு டைம்ஸ் நவ் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.