பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உன்ன நம்பி தான வந்தேன்! ஆடைகளை களையச் சொன்ன காதலனிடம் கெஞ்சும் இளம் பெண் வீடியோ!
நாகரீகம், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது கொங்கு மண்டலம். அப்படிப்பட்ட பகுதியில், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் என்ற 4 பேரும் சேர்ந்து, சிறுமிகளையும், இளம்பெண்களையும், திருமணமானவர்களையும் குறிவைத்து, சமூக ஊடகங்கள் வழியாக தொடர்புகொண்டு, ஆசை வார்த்தை கூறி, தங்களது வலையில் வீழ்த்தி, பாலியல் வல்லுறவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்துள்ளனர்.
தாங்கள் செய்யும் அக்கிரமத்தை, வீடியோவாக எடுத்து, அதனை அவ்வப்போது தங்களது நட்பு வட்டத்திற்கும் பகிர்ந்து, மிருகத்தனமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த 4 பேருக்கும் அரசியல் கட்சிகளிலும் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் போலீசில் புகார் அளித்தும், உடனடியாக, இவர்கள் கைது செய்யப்படவில்லை.
அத்துடன், நீண்ட இழுபறிக்குப் பின்னர் இவர்கள் கைதானாலும், உடனடியாக, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பலாத்கார சம்பவம், இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு சமூகமாக, தமிழ்ச்சமூகம் மாறிவருவதையே இந்த சம்பவம் காட்டுகிறது. பெண்களுக்கு இன்றைய சமூக சூழலில் உரிய பாதுகாப்பு தேவை.
ஆண், பெண் சமத்துவம் என்பது முதலில் பாலியல் ரீதியான புரிதல் கொண்டதாக அமைய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள வீடியோ இதனை வலியுறுத்தும் வகையில் உள்ளது. காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை மிரட்டி அவர் ஆடைகளை களையுமாறு இளைஞர்கள் மிரட்டுகிறார்கள்.
அதற்கு அந்த பெண் அழுதபடியே உன்னை நம்பித்தானே வந்தேன் இப்டி பண்ணிட்டியே என்று கதறியபடியே ஆடைகளை கழட்டுவதும் அதனை அந்த கும்பல் வீடியோ பதிவு செய்வதும் கலங்க வைப்பதாக உள்ளது.