ஒரு வாரமாக உணவளிக்காமல் 3 வயது மகளை கொடூரமாக கொலை செய்த தாய்..! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

3 வயது மகளுக்கு ஒரு வாரம் உணவளிக்காமல் கொடூரமாக கொலைசெய்யப்பட்டிருப்பது ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவை சேர்ந்தவர் மரியா. என்னுடைய மகளின் பெயர் கிறிஸ்டினா. கிறிஸ்டினாவின் வயது 3. சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தன் குழந்தைக்கு எந்தவித உணவையும் அளிக்காமல் மரியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் குழந்தையை கொடுமைப்படுத்தும் விதத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாத குடியிருப்பில் சிறிதளவு உணவை மட்டும் கொடுத்துவிட்டு, 1 வார காலத்தை மரியா நண்பர்களுடன் செலவழித்துள்ளார். 

கிறிஸ்டினா தயிர், கொத்திறைச்சிகளை சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்து போனார். நிர்வாணமாக அந்த குழந்தை ஒரு குப்பைத் தொட்டியில் இறந்து கிடந்தது. இதன் காரணமாக சென்ற ஆண்டு மரியா கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணை நடந்தபோது, வேண்டுமென்றே குடியிருப்பின் கதவை மூடிவிட்டு சென்றதாக மரியா ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆத்திரமடைந்த நீதிபதிகள் மரியாவுக்கு 13 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். மேலும், தண்டனை நிறைவேற்றிய பிறகு ஓராண்டு வீட்டுக்காவலில் வைக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது ரஷ்ய நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.