இரவு நேரம் காதலனுடன் ஒதுக்குப்புறமாக ஒதுங்கிய காதலிக்கு கஞ்சா ஆசாமிகளால் நேர்ந்த பயங்கரம்! வேலூர் கோட்டை திகுதிகு!

காதலனை அடித்து புறந்தள்ளிய ரவடி கும்பல், காதலியை கதற கதற கற்பழித்த சம்பவமானது வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலூரிலுள்ள பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய வயது 24.

இதே ஜவுளிக்கடையில் வேலூர் காட்பாடியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.  ஒரே இடத்தில் பணியாற்றி வந்ததால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியது. தனிமையில் உரையாடுவதற்கான நேற்று இரவு 9:50 இருவரும் வேலூர் கோட்டை பூங்காவுக்கு சென்றனர். அங்கு அகழி கரையோரத்தில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் தனிமையில் இருப்பதை உணர்ந்த 3 பேர் அவர்களை மிரட்ட முடிவெடுத்தனர். அவர்களுக்கு பின்னால் சென்று, திடீரென்று அந்த இளம்பெண்ணின் கைகளை பிடித்து இழுத்து செல்ல முயன்றனர். அப்போது அதனை தடுக்க முயன்ற அவருடைய காதலனை அடித்து உதைத்தனர். கையிலிருந்த நீளமான கத்தியை உபயோகித்து காதலனை மிரட்டி அமர வைத்தனர்.

அதன் பின்னர் அந்த இளம்பெண்ணிடம் இருந்த கம்மல் மட்டும் செல்போனை அவர்கள் பறித்துக்கொண்டனர். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த பெண் கூச்சலிட தொடங்கியவுடன், அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் அங்கு வர தொடங்கியதை உணர்ந்து 3 பேரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். பொதுமக்கள் அந்த இளம்பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் காதலிக்கு நேர்ந்த இன்னல்கள் குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்தார்.  புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 குற்றவாளிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது வேலூர் மாவட்டம் அண்ணா சாலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.