நீச்சல் குளத்தில் சடலங்களாக மிதந்த மாமனார் - மருமகள்..! பதற வைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி!

வீட்டின் பின்புறத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நீச்சல்குளத்தில் மாமனார், மருமகள் மற்றும் பேத்தி மூழ்கி உயிரிழந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பாரத் பட்டேல். இவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் இவர் 5 படுக்கை அறை கொண்ட ஒரு பிரம்மாண்ட வீட்டினை விலைக்கு வாங்கினார். அந்த வீட்டில் நீச்சல் குளம் இருந்தால் நன்றாக இருக்கும், என்று அனைவரும் ஆசைப்பட்டனர்.

ஆசைக்கே ஏற்றவாறு நீச்சல் குளம் அழகான முறையில் கட்டி அமைக்கப்பட்டது. நேற்று திடீரென்று நீச்சல் குளத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் அவசர எண் 911-க்கு அழைப்பு விடுத்து கூறியுள்ளனர். காவல்துறையினர் உடனடியாக பாரத் பட்டேல் வீட்டிற்கு விரைந்தனர்.

காவல்துறையினர் அங்கு கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாரத் பட்டேல், அவருடைய மருமகனான நிஷா மற்றும் 8 வயது பேத்தி ஆகியோர் நீச்சல் குளத்தில் மூழ்கி கிடந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

3 பேர் இறந்தபோது பிற குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள் இருந்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவமானது நியூஜெர்ஸி மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.