பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை 2வது கணவர் கைவிட மறுத்ததால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடைக்கானலில் நடைபெற்றுள்ளது.
பல பெண்களுடன் உல்லாசம்..! கணவனை மிரட்ட தீக்குளித்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்த தந்தி மேடு பகுதியை சேர்ந்த ராணி என்பவர் கணவர் பன்னீர்செல்வம் இறந்து விட்ட நிலையில் 2வதாக பூம்பாறையை சேர்ந்த செல்வம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராணிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் செல்வத்துக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடனும் அவர் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்ததும் ராணிக்கு தெரியவந்தது.
இந்த விவகாரம் அறிந்த அவர் கண்டித்துள்ளார். ஆனாலும் செல்வம் தன்னுடைய போக்கின்படி சென்றதால் நேற்று அவருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ராணி தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் செல்வம் காப்பாற்ற முயன்றார். இதில் 2 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
இருவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.