இளம்பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த 7 கயவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.
3 சகோதரர்கள்! 7 பேர்! 23 வயது இளம்பெண்ணுக்கு மாறி மாறி செக்ஸ் டார்ச்சர்! பிறகு நேர்ந்த விபரீதம்!

ராஜஸ்தான் மாநிலம், ஜலாவர் மாவட்டத்தைச் சேர்ந்த மன்புரா ஜாகிர் கிராமத்தைச் சேர்ந்த 7 பேர் இந்த சம்பவத்தைச் செய்துள்ளனர். அவர்களின் பெயர், பானே சிங், கன்ஷ்யாம், திவான், மங்கிலால், துர்காலால், பப்பு மற்றும் மகிலால் ஆகும். இவர்களில், பானி சிங், கன்ஷ்யாம், திவான் ஆகியோர் சகோதரர்கள் ஆவர்.
இவர்கள், கடந்த மே 12ம் தேதியன்று, அதே பகுதியில் தனிமையில் நடமாடிக் கொண்டிருந்த 26 வயது பெண்ணை அணுகியுள்ளனர். தங்களுடன் உடலுறவுக்கு வருமாறு அவர்கள் அழைத்துள்ளனர். ஆனால் இதனை கேட்டு அந்த இளம் பெண் இவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை இந்த ஏழு பேரும் தாக்கியுள்ளனர்.
பிறகுதிடீரென கடத்திச் சென்று, கதற கதற பலாத்காரம் செய்துள்ளனர். இதன்பேரில், அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், குற்றம் நடந்தது உறுதி செய்யப்பட்டதால், சம்பந்தப்பட்ட 7 பேர் மீது வழக்குப் பதிந்த போலீசார், அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.