இரவு 11 மணி! உடல் சோர்வாக தனியாக அமர்ந்திருந்த 25 வயது பெண்! காரணம் கேட்ட போது சொன்ன பகீர் தகவல்! திருச்சி திகுதிகு!

இளம்பெண் ஒருவர் ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவமானது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டத்தில் பிரபலமான சந்தைகளில் காந்தி மார்க்கெட் ஒன்று. இங்குள்ள பெட்ரோல் பங்குக்கு எதிரே ஒரு முள்காடு அமைந்துள்ளது. இரவு நேரங்களில் இந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இருக்காது.

நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பெண் ஒருவர் மிகவும் சோர்வான நிலையில் அங்கிருந்த செம்மரக்கட்டை மீது அமர்ந்திருந்தார். அப்போது அங்கு சென்ற காவலாளி அவரிடம் விசாரித்த போது, தன்னை ஆட்டோவில் 2 பேர் கடத்தி கற்பழித்ததாக கூறியுள்ளார். அப்போது அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர்கள் பயந்துகொண்டு தன்னை ஆட்டோவில் இருந்து கீழே இறக்கி விட்டு தப்பிச்சென்றனர் என்று அந்த பெண் கூறியுள்ளார்.

உடனடியாக அந்த காவலாளி அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த பெண்ணின் பெயர் லிடியா. இவருடைய வயது 25.

இதனிடையே காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். ஆட்டோவில் கடத்தி தன்னை 2 பேர் கற்பழித்ததாக அந்த பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார். உடனடியாக காவல்துறையினர் அப்பகுதியின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த சம்பவம் அதில் பதிவாகி இருந்தது. கேமரா பதிவுகளை கொண்டு காவல்துறையினர் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.