227 குழந்தைகள் நரபலி! தோண்ட தோண்ட சடலம்! பதை பதைக்க வைக்கும் சம்பவம்!

உலகின் அதிக நரபலி கொடுக்கப்பட்ட இடம் என்று சொல்லப்படும் பெருநாட்டில் 227 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 பெரு நாட்டின் தலைநகரம் என்று சொல்லப்படும் லீமா என்னும் பகுதியை அடுத்த ஹுவான்ஷாஅகோ என்ற இடத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக தொல்லியல் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியின் மூலம் கிமு காலத்தில் மக்கள் பயன்படுத்திய பொருள்கள் அவர்கள் நாகரிகம் சார்ந்த தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.

இந்நிலையில் இதே இடத்தில் முற்காலத்தில் அதிகமான நரபலிகள் கொடுக்கப்பட்டதாக தகவல் ஒன்று வெளியானது. இதை அடுத்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் துரிதமாக செயல்பட்டு ஆராய்ச்சியை ஆர்வத்துடன் மேற்கொண்டனர்.

இதில் தற்பொழுது தோண்டப்பட்டது வரை 6 முதல் 14 வயது வரையிலான 227 குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை ஆராய்ச்சி செய்ததில் அனைத்தும் கிபி க்கு பின் 1200 முதல் 1500 ஆண்டுகளுக்குள் கொடுக்கப்பட்ட நரபலி என்பது தெரிய வருகிறது.

இந்த நரபலியானது அக்காலத்தில் மோசமான வானிலை ஆக கருதப்பட்ட எல் நினோ என்ற இயற்கை சீற்றத்தை தவிர்க்கவே கொடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இன்னும் தோண்டுதல் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் அதிக உடல்கள் கண்டெடுக்கப்படும் என்ற அதிர்ச்சி ஆராய்ச்சியாளர்களிடம் ஏற்பட்டுள்ளது.