வயது 22 தான்..! ஆனால் ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் தேத்திவிடுவார்..! சென்னையை கலக்கும் பிரியங்கா!

சென்னையில் மின்சார ரயில்களில் பெண் பயணிகளிடம் பணம், நகை, செல்போன்களை திருடிவந்த பெண் பயணிகளால் பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.


சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பவர் அதிக படிப்பறிவு இல்லாத காரணத்தால் கூலி வேலைக்கு செல்ல மனமில்லாமல் திருடும் தொழிலை செய்து வந்துள்ளார். இவர் கண்ட இடத்தில் திருடி எக்குத்தப்பாக மாட்டிக் கொள்வதில்லை. மின்சார ரயில்கள் மட்டுமே இவரது குறி. சென்னை கடற்கரை தாம்பரம் மார்க்கத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினமும் காலையில் இருந்து மாலை வரை திருடுவது வழக்கம்.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில் மட்டுமே பயணிக்கும் இவர் கூட்ட நெரிசலை பயன்படுத்திக் கொண்டு பெண்களிடம் உரசி நின்றபடியே அவர்களது கைப்பையில் இருந்து என்னென்ன எடுக்க முடியுமோ எடுத்து விட்டு அடுத்த நிலையத்தில் இறங்கி விடுவார். இது குறித்து பலமுறை பெண் பயணிகள் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். 

பல நாள் திருடி ஒருநாள் மாட்டுவாள் என்பது போல நேற்று கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயிலில் வழக்கபோல் பயணம் செய்த பிரியங்கா ஒரு பெண் பயணியிடம் கைவரிசையை காட்டும்போது சக பயணிகள் பார்த்துவிட்டனர். பின்னர் பிரியங்காவை தாம்பரம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

22 வயதே ஆன பிரியங்காவை கைது செய்த போலீசார் ரயிலில் பிக்பாக்கெட் அடிப்பதில் கைதேர்ந்தவர் என தெரிவித்தனர். மேலும் பிரியங்காவிடம் இருந்து ஏற்கனவே திருடப்பட்ட 25 ஆயிரம் ரூபாய், ஒரு சவரன் வளையல், நான்கு செல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.