முசாஃபர்நகர்: துப்பாக்கி முனையில் சகோதரிகள் 2 பேரை பலாத்காரம் செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
துப்பாக்கி முனையில் அக்காள் - தங்கையின் ஆடைகளை கலைந்து வல்லுறவு! அதிர வைத்த சம்பவம்!
உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகரில் உள்ள கசர்வா கிராமத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட சகோதரிகள் 15 மற்றும் 13 வயது நிரம்பியவர்கள் ஆவர். கரும்பு வயலுக்கு தங்களது அம்மாவை தேடி, சென்ற அவர்களை, வழிமறித்த 4 இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டுவிடுவோம் எனக் கூறி, அங்கேயே பலவந்தமாக, இருவரையும் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது என்றும், அவர்கள் சிறுமிகள் 2 பேரையும் மிரட்டியுள்ளனர். இதுதொடர்பாக, போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமீபகாலமாக இத்தகைய குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கிராமப்புறங்களில் அதிக ரோந்து நடத்தி பாதுகாப்பை உறுதி செய்யும்படி, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.